24
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
5. குலோத்துங்கன் சோழமண்டலத்தில்
முடிசூடுதல்
அதிராசேந்திரசோழன் இறந்தபிறகு சோழநாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநிலமன்னரது கலகம் ஒருபுறமும் உண்ணாட்டுக் குழப்பம் மற்றொருபுறமும் மிக்கெழவே, சோழ நாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாப் பெருந் துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார்,
66
ய
மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித் துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே
சாதிக ளொன்றோ டொன்று தலைதடு மாறி யாரும் ஓதிய நெறியி னில்லா தொழுக்கமு மறந்து போயே
ஒருவரை யொருவர் கைமிக் கும்பர்தங் கோயில் சாம்பி அரிவையர் கற்புச் சோம்பி யரண்களு மழியவாங்கே! கலியிருள்பரந்தது
99
என்று இக்குழப்பத்தை அந்நூலிற் கூறியுள்ளார். அன்றியும்
சோழநாடு அக்காலத்தில் அரசனின்றி அல்லலுற்றிருந்த செய்தியை,
66
அருக்க னுதயத் தாசையி லிருக்கும்
எனவும்,
கமல மனைய நிலமகள் தன்னை
முந்நீர்க் குறித்த அந்நாள் திருமால்
திக் கேழ லாகி யெடுத்தன்ன யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத் தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தி”
1. க.பரணி - தா. 245, 246, 247.