26
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
பரிசில் சுமந்தனர் கவிஞர்
பகடுசுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள்
அவனிசுமந்தன புயமும்.
எனவரும் கலிங்கத்துப்பரணி தாழிசைகளால் உணரலாம்.
குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை ம பற்றி வரலாற்றாராய்ச்சியாளர்க்குள் கருத்து வேறுபாடு உண்டு. அதிராசேந்திரசோழனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் சோழநாட்டாட்சியைக் கைப்பற்றினன் என்பர் சிலர். வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தினமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தால் அவன் கொல்லப்பட்டா னென்றும் அச்சமயத்தில் குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டானென்றும் கூறுவர் வேறு சிலர். கங்கை கொண்ட சோழன் மனைவி, தன்பேரனாகிய இவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டாள் என்பர் மற்றுஞ் சிலர். அதிராசேந்திர சோழன் நோய்வாய்ப் பட்டிறந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரமிருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்த போது அந்நாடு அரசனின்றி அல்லலுற்ற நிலையில் இருந்த தென்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப்பரணியும் ஒருங்கே கூறுவதாலும் அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால்கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலை நோக்குங்கால் அவன் வைணவசமயத்தில் வெறுப்புடையனல்ல னென்பது நன்று புலனாதலாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு அவன் காலத்துக் கல்வெட்டுக் களில் போதிய ஆதாரங்கள் கிடைத்தலாலும் அவர்கள் கூறுவன் வெல்லாம் சிறிதும் பொருந்தாமை காணலாம். கங்கை கொண்ட சோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தனரென்பது கல்வெட்டுக்களால் தெளியக்கிடத்தலால் அவன் மனைவி தன் பேரனாகிய குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டன ளென்பதற்கும் இடமில்லை.