பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்குலோத்துங்க சோழன்

33


களாகச் சேர்த்து வந்த பெரும் படையானது அவன் தன் தமையனைத் துங்கபத்திரைப் போரில் இங்ஙனம் தோல்வியுறச் செய்து இரட்டமண்டலத்துள் தன் தமையன் பாலிருந்த நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது. விக்கிர மாதித்தனும் மேலைச்சளுக்கிய நாடாகிய இரட்டபாடி ஏழரை யிலக்கம் முழுமைக்கும் முடிமன்னன் ஆயினான். முதலாம் மேலைச்சளுக்கியப் போர் இவ்வாறு முடிவெய்தியது. இதனை முதலாம் துங்கபத்திரைப் போர் என்றும் கூறலாம்.

2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போராகும். இப்போரைப் பற்றிய செய்திகள் இப்போது நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியும் இதனை விளக்கிற்றில்லை. ஆயினும், இது, விக்கிரமாதித் தனுக்குத் துணையாக நின்று போர்புரிந்த நுளம்ப பாண்டி யனாகிய திரிபுவனமல்ல பாண்டியனுடன் குலோத்துங்கன் நடத்திய போராய் இருந்தல் வேண்டுமென்பது ஊகிக்கப் படுகிறது. இப்போர் நிகழ்ச்சியில் நம் குலோத்துங்கன் வெற்றி பெற்றான். இவனது பகைவனாகிய பாண்டியன் கொல்லப் பட்டான். இது குலோத்துங்கன் நுளம்ப பாண்டியரோடு நடத்திய போராதலின், இதனை நுளம்ப பாண்டியப் போர் என்று கூறுதல் பொருத்தமுடையது.

3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர்:- இது, குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டாகிய கி.பி. 1081-ல் நிகழ்ந்தது; விக்கிரமாதித்தன் அவன் தம்பி சயசிங்கன் ஆகிய இருவரோடும் நம் குலோத்துங்கன் நடத்தியதாகும்.

ச்சண்டைக்குரிய காரணம் நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்று விக்கிரமாதித்தனது தம்பியாகிய சயசிங்கன் என்பான் அரசப்பிரதிநிதியாகவிருந்து ஆண்டுகொண்டிருந்த வனவாசியைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னை வந்தெதிர்த்த விக்கிரமாதித்தனோடு கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் பெரும்போர் புரிந்தனன்.' 1இப்போரில், 1. சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 31.