பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1






தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 நடைபெற்ற போராகும்;1 வடகலிங்க வேந்தனாகிய அனந்த வன்மன் என்பானோடு குலோத்துங்கன் நடாத்தியது.'வடக லிங்கத்திற்கு நேரிற்சென்று இப்போரை வெற்றியுற நடாத்தித் திரும்பியவன் குலோத்துங்கனது படைத்தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமானே யாவன். இவனோடு வாண கோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத் தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர்.3 குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சியை விரித்துக் கூறும் நூல் கலிங்கத்துப் பரணி என்பது. அந்நூல் இப்போரைப் பற்றி யுணர்த்தும் செய்திகளை அடியிற் காண்க.

3

ஒருநாள் நம் குலோத்துங்கன் காஞ்சி மாநகரிலுள்ள அரண்மனையில் ஓவியமண்டபத்து வீற்றிருந்தபோது, வாயில் காப்போரில் ஒருவன் ஓடிவந்து அரசனது அடிகளை முடியுற வணங்கி, ‘எம்பெருமானே, வேந்தர் பல்லோர் திறைப்பொருள் காணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக் கொண்டிருக் கின்றனர்' என்றனன். அதனைக் கேட்ட அரசன் ‘அன்னாரை விடுக' என,

6

தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே

கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே கங்கர் கடாரர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் நுளும்பர்களே வங்கர் இலாடர் மராடர் மவிராடர் யிந்தர் சயிந்தர்களே சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே கொங்கணர் கொங்கர் குலிங்கர் அவந்தியர் குச்சரர் கச்சியரே வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்தர் திகத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே.'

என்ற மன்னர்கள் அம்மன்னனை யணுகிப் பணிந்தெழுந்து ‘மன்னர் மன்ன அடியேம் நினக்கு இறுக்கக் கடவதாய திறைப் பொருள் கொணர்ந்துளேம்' என்றுரைத்துத் தாம் கொண்டு

1. S.I.I.Vol. IV, page 136

2. Epi. Ind. Vol. III, page 337. Indian Antiquary Vol. 18, pages 162 & 166. க. பரணி - தா. 352.

3.