50
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
10. குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும்
குலோத்துங்கனது பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவளே இவ்வேந்தனது முதல் மனைவி. இவளுக்குத் தீனசிந்தாமணி என்ற பெயரும் உண்டு. இவ்வரசி இவனது அம்மானாகிய இரண்டாம் இராசேந்திர சோழனது மகள். இவனுக்கு வேறு இருமனைவியரும் இருந்தனர். அவர்கள் ஏழிசை வல்லபி, தியாகவல்லி என்ற இருவருமேயாவர். பட்டத் தரசியாகிய மதுராந்தகி என்பாள் குலோத்துங்கனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டில் இறந்துவிட்டனள். பின்னர், இவனது மற்றொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத் தரசியாயினள். இவளே இவ்வரசனது ஆட்சியின் பிற்பகுதி முழுமையும் பட்டத்தரசியாக விருந்து வாழும் பேற்றை எய்தியவள்.
'பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறி யுடனே இனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச் - சென்னி துணை யுடனாணையை நடத்துமுரிமை தியாகவல்லி நிறைசெல்வி யுடன் சேர்ந்துவரவே' என்னுங் கலிங்கத்துப்பரணிப் பாடலால் பட்டத்தரசியாகிய தியாக வல்லியின் பெருமையும் அரசன் அவள் பால் வைத்திருந்த மதிப்பும் நன்கு விளங்கும். இவள் 'சிவனிடத்துமையெனத் தியாகவல்லி உலக முழுதுடையாள் என்று நம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியிலும் புகழப் பட்டுள்ளாள்.'
-
இனி, ஏழிசைவல்லபியை 'ஏழிசை வளர்க்க வுரியாள்’2 என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலால் இவள் ஏழிசையிலும் புலமை யெய்தி அவற்றை இனிது வளர்த்துவந்தனள் என்பது நன்கு புலப்படுகின்றது.
1.
க.பரணி
—
SIT. 273.
2. க.பரணி - தா. 272.