பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்குலோத்துங்க சோழன்

51


நம் குலோத்துங்கனது மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவளைப் புவனமுழுதுடையாள் அல்லது அவனி முழுதுடையாள் என்றும், மற்றையோரை ஏழுலகுமுடையாள், திரிபுவனமுடையாள், உலகுடையாள் என்றும் அக்காலத்தில் வழங்கிவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவர்களது இயற்பெயர்களோடு இப்பெயர்களையும் சேர்த்துச் சிறப்பிப்பது அந்நாளில் பெருவழக்கா யிருந்தது. இவ்வுண்மையை அக்காலத்துக் கல்வெட்டுக்களைக் கொண்டறியலாம்.1

மதுராந்தகி என்பவள் பட்டத்தரசியாக நிலவிய நாட் களில் புவனிமுழுதுடையாள் என்றும் அவனி முழுதுடையாள் என்றும் வழங்கப்பட்டனள். அப்போது, ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற மற்ற மனைவியர் இருவரும் ஏழுலகுமுடை யாள் உலகுடையாள் என்னும் சிறப்புப் பெயர்களை எய்தி வாழ்ந்தனர் மதுராந்தகி வானுலகடைந்தபின்னர்த் தியாக வல்லி பட்டத் தரசியாயினள் என்று முன்னரே கூறியுள்ளோம். அவள் அந்நிலையை எய்தியவுடன் அக்கால வழக்கம் போல் புவனி முழு துடையாள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனள்.

நம் குலோத்துங்கனது முதல் மனைவியாகிய மது ராந்தகிக்கு மக்கள் எழுவர் இருந்தனர். அவர்களுள் முதல் மகன் விக்கிரம சோழன் எனப்படுவான். இரண்டாம் மகன் இராசராசன் என்னும் பெயரினன். மூன்றாம் மகன் வீரசோழன் என்பான். மற்றைப் புதல்வர்களது பெயர்கள் இக் காலத்துப் புலப்பட வில்லை. அன்றியும், அம்மங்கைதேவி என்ற ஒரு மகளும் இருந்தனள். இவர்களுள் முதல்வனாகிய விக்கிரமசோழன் கி.பி. 1108-ஆம் ஆண்டில் சோழமண்டலத்திற்கு இளவரசுப் பட்டங் கட்டப் பெற்றுத் தன் தந்தையிடம் அரசியல் நுட்பங்களைக் கற்றுவந்தான். இவன், தென் கலிங்க மன்னனாகிய தெலுங்க வீமன்மேல் ஒரு முறை படையெடுத்துச் சென்று அவனைப் போரிற்புறங்கண்டு வெற்றித்திருவுடன் திரும்பினான்.2

1. S.I.I. Vol. III, page 177.

2.

"போர்த்தொழிலால்"

ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க் கொண்ட

தானைத் தியாக சமுத்திரமே

விக்கிரமசோழனுலா - கண்ணி - 331