பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1






தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

13. குலோத்துங்கனது அரசியல்

னி

நம் குலோத்துங்கனது அரசியல் முறைகளை விளக்குவாம். பொதுவாக நோக்குமிடத்துப் பழைய தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படும் அரசாங்க முறைகள் எல்லாம் நம் மன்னர் பெருமானாகிய குலோத்துங்கனுக்கும் உரியவையென்றே கூறலாம். அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஒன்றையும் விடாது எழுதப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியும் என்பது திண்ணம். ஆதலால், அவ்வரசியல் முறைகளை மிகச் சுருக்கமாக எழுதி விளங்க வைத்தலே எமது நோக்கமாகும்.

1. இராச்சியத்தின் உட்பிரிவுகள் :- நமது வேந்தர் பெருமானது ஆணையின்கீழ் அடங்கியிருந்த சோழ இராச்சியம் அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள், சோழமண்டலம், சயங் கொண்ட சோழமண்டலம், இராசராசப் பாண்டிமண்டலம், மும்முடி சோழமண்டலம், வேங்கைமண்டலம், மலை மண்டலம், அதிராசராசமண்டலம் என்பன சிறந்தவை. இவற்றுள், சோழமண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென்னார்க் காடு ஜில்லாவின் தென் பகுதியையும் தன்னகத்துக் கொண்டுள்ள நிலப்பரப்பாகும்; சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும்பகுதியையும் செங்கற் பட்டு, வடவார்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக் கொண்டது; இராசராசப் பாண்டிமண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்டது; மும்முடி சோழமண்டலம் என்பது ஈழமாகிய

லங்கையாகும்; வேங்கை மண்டலம் என்பது கீழைச் சளுக்கிய நாடாகும்; மலைமண்டலம் என்பது சேர நாடாகும்; இது திருவாங்கூர் இராச்சியத்தையும் மலையாளம் ஜில்லாவையும்