முதற்குலோத்துங்க சோழன்
67
-
5. அரசிறை : அக்காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்திவந்த நிலவரி காணிக்கடன் என்று வழங்கப்பெற்றுள்ளது. க் காணிக்கடன் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும் காசுமாக வாதல் செலுத்தப் பெறுவது வழக்கம்.1 க்காணிக் கடனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டு தோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கக் கருவூலத்திற்கு அனுப்புவர். மூன்றாம் ஆண்டு தொடங்கியும் கடந்த ஈராண்டிற்கும் நிலவரி கொடாதவர் நிலங்கள் ஊர்ச் சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம்.2 அங்ஙனம் விற்றமையால் கிடைத்தபொருள் அரசாங்கத்தில் சேர்ப்பிக்கப் பெறும்.
3
இனி, நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம், இடைப்பாட்டம், (இடைப்பூட்சி) ஓடக்கூலி, செக்கிறை, வண்ணாரப்பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு, ஈழம்பூட்சி முதலான பலவகை வரிகளும் இருந்துள்ளன. எனவே, அந்நாளில் பற்பல தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருத்தல் அறியத்தக்கது. வரிகளின் பெயர்கள் மிகுந்துள்ளமைபற்றி அரசாங்கவரிகள் அக்காலத்தில் மிகுந்திருந்தன என்று கருதற்கு இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் குறிக்கப் பெற்றிருத்தலின் வரிப் பெயர்கள் மிகுந்து காணப்படுகின்றன வேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப் பெயரால் எல்லாத் தொழிலாளரிடத்தும் வரி வாங்கப்படு கின்றது. ஆகவே, இற்றைநாள் தொழில் வரி ஒன்றே எல்லாத் தொழில்களுக்குமுரிய பல்வகைத் தொழில் வரிகளையும் தன்னகத்து அடக்கிக் கொண்டு நிற்றல் காணலாம்.
கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளை யுணர்த்தும் மொழிகளாம். கண்ணாலக்காணம் என்பது கல்யாண து வரி என்றும் அது திருமணநாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக்கால் பணமேயாம்
1. S.I.I. Vol. II. Nos. 4 & 5.
2.S.I.I.Vol. III, No.9.
"
3.S.I.I.Vol. II, Nos. 98 & 99.