72
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
புரிந்தோரும், கிராம குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டவரும், பிறர்பொருளைக் கவர்ந்தோரும், கள்ளக் கையெழுத்திடலாகிய கூடலேகை (Forgery) செய்தோறும், குற்றங்காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் (Bribe) கொண்டோரும், கிராமத் துரோகி என்று கருதப்பட்டோரும், இங்குக் குறிக்கப்பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராமசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர்."
பொதுமக்கள், கிராம சபையின் உறுப்பினரை ஆண்டு தோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுப்பது வழக்க மாகும். தேர்ந்தெடுத்தற்குக் குறிக்கப்பெற்ற நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுதற்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகையில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரையும் கூட்டுவர். அக்கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்பெறும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடத்தை எடுத்து அதனுள் ஒன்றும் இல்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழேவைப்பர். உடனே, அவ்வூரில் ஒவ்வொரு குடும்பிலுள்ளாரும் தமக்குத் தகுதியுடை யார் என்று தோன்றுவோர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்குசேர்த்து, அவை எக்குடும்பிற் குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப் பெற்ற வாயோலை யொன்றைச் சேர்த்துக் கட்டி அக்குடத்தில் இடுவர். இங்ஙனமே எல்லாக்குடும்பினரும் குட வோலை இடுவர். பின்னர், அம்முதியார் அங்கு நடை பெறுவதை யுணராத ஓர் இளைஞனைக் கொண்டு அக்குடத்தினின்றும் ஓர் ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறு ஒரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனைக் கொண்டு எடுக்கச் செய்து, அதனைத் தாம் பெற்று, அங்குள்ள கரணத்தான் (கணக்கன்) கையிற்கொடுப்பார். அவன் தன் ஐந்து விரல்களையும் விரித்து உள்ளங்கையில் அதனை வாங்கி, அவ்வோலையில் எழுதப்பெற்றுள்ள பெயரை அங்குள்ளோர் யாவரும் உணருமாறு படிப்பான். பின்னர் அங்குள்ள நம்பிமார் 1. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக்.53,55.