முதற்குலோத்துங்க சோழன்
73
எல்லோரும் அதனை வாசிப்பர் அதன் பிறகு, அப்பெயர் ஓர் ஓலையின் கண் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலையிற் குறிக்கப்பெற்ற பெயருடையவரே அக்குடும்பிற்குரிய கிராம சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர்.'
இங்ஙனமே மற்றைக் குடும்புகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப் பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்பு களுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபின்னர், அவர்களுள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் முதிர்ந்தோர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றை யோருள் சிலர் தோட்டவாரியராகவும், சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்சவாரவாரியராகவும் ஏற்படுத்தப் படுவர். எனவே, கிராமசபை, சம்வத் சரவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்ற ஐந்து உட்கழகங்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. சபையின் உறுப்பினர் ஏதேனும் குற்றம் பற்றி
டையில் விலக்கப் பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாது தம் வேலைகளை நடத்துவதற்கு உரிமை பூண்டவராவர். இவர்களை ஆளுங்கணத்தார் எனவும் பெருமக்கள் எனவும் கூறுவர். இவர்கள் கூடுதற்கு ஊர்தோறும் மாளிகைகள் அமைக்கப் பட்டிருந்தன. இவர்களுள் நியாய விசாரணை செய்வதும் அறநிலையங்கள் நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் சம்வத்சரவாரியரது கடமை யாகும். ஏரி குளம் ஊருணி முதலிய நீர்நிலைகளைப் பாது காத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமையாகும். நிலத்தைப் பற்றிய எல்லா வற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்டவாரியரது கடமை யாகும். பல்வகையாலும் வாங்கப் பட்ட பொற்காசு செப்புக்காசு களை ஆராய்வது பொன் வாரியரது கடமையாகும். விளைவில் ஆறிலொரு கடமை அரசனுக்காகவும் ஏனை ஐந்து கூறு நிலமுடையார்க்காகவும் பிரித்துக் கொடுப்போர் பஞ்சவார வாரியராவர். இச் சபையார் பணித்தவற்றைச் செய்பவன் கரணத்தான்எனப்படுவான். இவனை மத்தியஸ்தன் எனவும் 1. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக். 54.