இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
252
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3
அதிராசேந்திர சோழன்
திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டில மன்னுயிர் தோறு மின்னருள் சுரந்து நிறைநிழல் பரப்பி நிற்ப முறையிற்
செங்கோல் திசைதொறுஞ் செல்லத் தங்கள் குலமுதற் பரிதியின் வலிசேர் புவனிக்கும்
ஒற்றை யாழி யுலாவ நற்றவத்
திருமலர்ச் செல்வியு மிருநிலப் பாவையும்
கீர்த்தியங் கிள்ளையும் போர்த்தனிப் பூவையும்
வதுவையிற் புணர்ந்து பொதுமை துறந்து உரிமைத் தேவிய ராக மரபினிற்
சுடர்மணி மகுடஞ் சூடி நெடுநில
மன்னவர் முறைமுறை தன்னடி வணங்க
வீரமுந் தியாகமு மாரமெனப் புனைந்து
வீரசிம் மாசனத்து உலகமுழுதுடையாளொடும் -
வீற்றிருந்தருளிய
மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர்க்கு யாண்டு.