256
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3
அறங்கூறு முலகனைத்துங் குளிர்வளர்க்கு மழைமுழக்கின் திறங்கூற வரைகதிருஞ் செழுங்கமல் நனிநாண
ஒருமைக்க ணீரொன்பா னுரைவிரிம்ப வுணர்பொருளால் அருமைக்கண் மலைவின்றி யடைந்ததுநின் றிருவார்த்தை;
இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும் மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுவன்றி நினக்குரித்தோ புண்ணியநின் றிருமேனி; அம்போதரங்கம் பேரெண்
ஆருயிர்க ளனைத்தினையுங் காப்பதற்கே யருள்பூண்டாய் ஓருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும்;
தாமநறுங் குழன்மழைக்கட் டளிரியலார் தம்முன்னர்க் காமனையே முனந்தொலைத்தாற் கண்ணோட்டம் யாதாங்கொல்;
1. இது வீரசோழியம் யாப்புப் படலத்திலுள்ள 11-ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியராகிய பெருந்தேவனார் மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ள பாடலாகும்.
சிற்றெண்
போரரக்க ரோரைவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே;
ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே;
வார்சிறைப்புள் ளரையற்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே, பார்மிசை யீரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே'
மூச்சீர் இடையெண்
அருளாழி நயந்தோய் நீஇ;
அறவாழி பயந்தோய் நீஇ;
மருளாழி துரந்தோய் நீஇ;
மறையாழி புரந்தோய் நீஇ;
மாதவரின் மாதவ னீஇ;
வானவருள் வானவ னீஇ;
போதனரிற் போதன னீஇ;
புண்ணியருட் புண்ணிய னீஇ;