பிற்காலச் சோழர் சரித்திரம் - 2
249
வான் மறைக்கக் கண்டானிம் மண்மகளை வண்புகழால் தான்மறை கூத்தன் சமைத்து.
(பரனுமை வேட்ப(வே)சைவா சிரியர்)
51
திருவுருவ மானதிருக் கோலம் -பெருகொளியாற்
காட்டினான் தில்லைக்கே காசினிவாய் வெங்கலியை
ஒட்டினான் தொண்டையர் கோன்.
மன்றுதிகழ் தில்லைக்கே வாணிக் கரசகணந்
52
துன்றும் பொழின்மணவிற் றொண்டைமான் -என்றும்
இருந்துண்ணக் கண்டா னிகல்வேந்த ராகம்
பருந்துண்ணக் கண்டான் பரிந்து
தில்லைத் தியாகவலி (விண்சிற் பஞ்சவினி)
53
எல்லை நிலங்கொண்டிறையிழிச்சித் - தில்லை
மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர் குறைமுடிப்பான் தொண்டையர்கோ
என்றும் பெறுதலா லேராரெழிற்புலியூர்
54
மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று
கொடுத்தருளி மண்ணிற் கொடுங்கலிவா ராமே
தடுத்தனன் தொண்டையர்கோன் தான்
முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா
55
றொத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தி
னெல்லைக் கிரிவா யிசையெழுதி னான்கூத்தன்
தில்லைச் சிற் றம்பலத்தே சென்று.
தில்லை வளருந் தெளிதே னொளிதழைப்ப
56
நல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான் -வல்லத்திற்கு
கோட்டங்கொள் வாள்வேந்தர் கொற்றக் களியானை யீட்டங்கொள் காலிங்க ரேறு.
நூறா யிரங்கமுகு மாங்கமைத் தான்சினத்தின்
57
மாறாக வெல்களிற்று வாட்கூத்தன்-கூறாளும்
வல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாநடஞ்செய் தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.
52-58. சிதம்பரக் கல்வெட்டுக்கள்; S.I.I., Vol, IV, p.34