பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


விளங்கிற்று என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, தற்காலத்தில் இந்நாடு கும்ப கோணம், பாவநாசம் தாலுகாக்களில் அடங்கியுள்ள ஒரு பகுதி எனலாம். இன்னம்பர் நாட்டில் உள்ளதென்று கல்வெட்டுக் களால் அறியப்படும் ஏர் என்னும் திருப்பதி இந்நாளிலும் இன்னம்பருக்கு அணித்தாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றியும், அத்தலத்தைத் தம் திருப்பதிகங்களிற் கூறியுள்ள திருநாவுக்கரசு சுவாமிகள் ‘இன்னம்பர் ஏர்‘ எனவும் ‘ஏரார் இன்னம்பரார்’ எனவும் அதனை இன்னம்பருக்கு அணித்தாக வைத்துக் கூறியிருப்பதும் ஈண்டு அறிந்து கொள்ளற்பாலதாகும்.

இனி, முதல் இராசராசசோழனால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை இராசராசேச்சுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று ஏர் என்னும் திருப்பதி இன்னம்பர்நாட்டில் உள்ளது என்று உணர்த்து கின்றது. அது “ராஜேந்திர சிங்க வளநாட்டு இன்னம்பர்நாட்டுப் பழைய வானவன்மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எ) இந்நாட்டு அசுகூர் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எ) இந்நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலத்தார் இடக்கடவ திருமெய் காப்பு ஒன்றும் (எங) இந்நாட்டு ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு இரண்டும்” (South Indian Inscriptions Volume II. No. 70) என்பதாம். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள இக்கல்வெட்டும் இன்னம் பருக்கு அண்மையில் உள்ள ஏரகரத்தில் அமைந்துள்ள கோயிலிற் காணப்படும் கல்வெட்டும் தம்முள் ஒற்றுமையுடையன வாய் ஏர் என்ற ஊர் இன்னம்பர்நாட்டில் உளது என்றுணர்த்துதல் காண்க. ஆகவே, ஏர் என்னும் வைப்புத்தலம் இந்நாளில் ஏரகரம் என்ற பெயருடன் கும்பகோணம் தாலூக்காவில் காவேரி யாற்றிற்கு வடகரையில் உள்ளது. என்பது நன்கு உறுதியெய்துகின்றது.

பத்து, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வைப்புத்தலமாகிய ஏர், மும்மடி சோழமங்கலம் என்ற மற்றொரு பெயரும் உடையதாக இருந்தது என்பது ஏரகரத்திலுள்ள கல்வெட்டாலும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள கல்வெட்டாலும் புலப்படு-