பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

119


மணக்குடி என்ற பெயருடன் இந்நாளில் பல ஊர்கள் உள்ளன. அவற்றுள் நம் புலவர் பிரானது ஊர் யாது என்பதைத் துருவிப் பார்த்தல் வேண்டும். 'நின்ற நீதி' என்று தொடங்கும் பாயிரப் பாடலால் அவ்வூர் இடையளநாட்டில் உள்ளது என்பது பெறப்படுகின்றது. சோழமண்டலத்தில் முற்காலத்தில் பல உள்நாடுகள் இருந்தன என்பது பண்டைத் தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. அவற்றுள், இடையள நாடு என்னும் பெயருடைய நாடு ஒன்றும் இருந்தது என்பது தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள[1] கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

தஞ்சாவூர்க் கோட்டத்திலுள்ள திருத்தருபூண்டிக்

கூற்றத்திலேதான் இவ்விடையள நாடு இருந்தது என்பதும் அக்கல்வெட்டுக்களால் நன்கு அறியக்கிடக்கின்றது. அன்றியும், திருத்தரு பூண்டிக்குக் கிழக்கில் ஆறு கல் தூரத்திலுள்ள கொறுக்கை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டும் அவ்வூர் சோழ மண்டலத்தில் இடையள நாட்டில் உள்ளது என்று கூறுகின்றது. இச்செய்தி, தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டாலும் உறுதியெய்துகின்றது. எனவே, இடையள நாட்டிலுள்ள இக்கொறுக்கைக்கு அண்மையிலேதான் அகநானூற்றுரையாசிரியரது ஊராகிய மணக்குடியும் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இக்கொறுக்கைக்கு வடக்கே ஒரு கல் தூரத்தில் ஐங்குறு நூற்றில் குறிக்கப்பெற்றுள்ள சோழர் ஆமூர் உளது (ஐங்குறு. 56) இவ்வாமூர்க்கு வடக்கே இரண்டுகல் தூரத்தில் அரிச்சந்திர நதியின் தென்கரையில் மணக்குடி என்ற பெயருடன் ஓர் ஊர் உளது. இதுவே, இடையள நாட்டுக் கொறுக்கைக்கு அணித்தாகவுள்ள மணக்குடியாகும். எனவே, இம்மணக்குடியே அகநானூற்றுரையாசிரியரது ஊராகிய இடையள நாட்டு மணக்குடி என்பது தேற்றம். திருவாரூரிலிருந்து திருத்தரு பூண்டிக்குச் செல்லும் இருப்புப்பாதையிலுள்ள பொன்னறை என்னும் புகைவண்டி நிலையத்தில் இறங்கி அரிச்சந்திர நதியின் தென்கரை வழியாகக் கிழக்கே எட்டுக்கல் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வூர்க்குச்


  1. (S.I.I. Vol. II. Nos. 17, 18 and 70