பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

139


சாயாமலதிவீரபாண்டியன் சொல்லும்
      தமயந்திசரித்திரநைடதமுஞ் சொன்னார்
சுயமாகாது திகவிகள்சுத்தப் பொய்தான்
      தொடுகவிமாணிக்கவாசகர் சொன்னாரே

(ஞானவெட்டி 579)

தேவாரமானதிருவாசகத்தைச்
       செகத்தோர்கள் படித்து மெத்தத்தியங்கினார்கள்
பேயானவாண்டிகட்குப் பிழைப்புக்காகப்
       பேசிவைத்தார்மற்றொன்றும்பிச கேயில்லை

-(மேற்படி 600)

மேலேவரைந்துள்ள செய்யுட்களில் வியாசர்பாரதமும், கம்பர் இராமாவதாரமும், அதிவீரராமபாண்டியர் நைடதமும், சைவ சமயா சாரியர் நால்வரும் திருவாய்மலர்ந்தருளிய தேவார திருவாசகங்களும், மக்கட்குப் பயன்படாப் பொய்ந்நூல்களென்று சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள், இராமாவதாரமியற்றி யருளிய கம்பர்.(1120 கி.பி. 1200 கி.பி) கி.பி. 12-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கியவராதல் வேண்டுமென்று சேது ஸமஸ்தானத்தின் வித்வான் ப்ரும்மஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்கன் செந்தமிழ் 3-ஆம் தொகுதி 6-ஆம் பகுதியில் நிரூபணஞ் செய்துள்ளார்கள். தமிழில் நைடதமியற்றி யருளிய அதிவீர ராமபாண்டியரே, கூர்மபுராணம், இலிங்க புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியருளிய அரசரேறென்ப. இம்மன்னர் பெருமான், சகம் 1486-ல் தென்காசியில் முடிசூட்டப் பெற்று சகம் 1514 வரை ஆட்சிபுரிந்தன ரென்று தென்காசிக் கோயிற் கோபுரத்திற்காணப்படுஞ் சிலாசாசனங்கள் அறிவிக்கின்றன.[1] ஆகவே, இவ்வரசர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டினிறுதியில் (கி.பி. 1564 - கி.பி. 1592) வாழ்ந்தவராதல் வேண்டும். இனி, திருக்குறளருளிய திருவள்ளுவனார் தம்நூலை, அக்காலத்தே தென்மதுரையகத்துத் தமிழுக்கரசராய் வீற்றிருந்தருளிய மூன்றாஞ் சங்கப்புலவர் நாற்பத்தொன் பதின்மரது முன்னிலையில்


  1. Travancore Archaeological Series No. VI. p.p. 26