பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

173


ஊருக்கொரு குடியினராயிருந்து கொண்டு பல ஊர்களில் தமிழ் வளர்த்து வந்த வீரசைவப் புலவர்கள் அருந்தொண்டுகளை இந்நாளில் நம்மனோர்க்கு நினைப்பூட்டி மகிழ்விக்கின்றன எனலாம். இவர்களுடைய தமிழ்த் தொண்டையும், சமயத் தாண்டையும் நம் தமிழ்நாடு என்றென்றும் மறவாமல் போற்றும் என்பது திண்ணம்.

அன்பும் அருளும் நிறைந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிக மகா சந்நிதானம் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவு விழா நடைபெறுவ துணர்ந்து பெருமகிழ்ச்சியுறுகின்றேன். இவர்கள், சைவமும் தமிழும் தழைத்தோங்க அரும்பெருந் தொண்டுகள் புரிந்து பல்லாண்டுகள் வாழ்ந்தருளுமாறு புறம்பயத் தெம்பெரு மான் திருவடிகளைப் பன்முறை வணங்குகின்றேன்.