ஆய்வுக் கட்டுரைகள்
45
நாயனார் புராணத்திலும் ஆனாய நாயனார் புராணத்திலும் முறையே கூறியுள்ள,
அங்கணகன்றம்மருங்கிலங்கணர் தம் பதிபலவுமணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில்[1]
மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடுப் ரப்பிய பண்ணைவ ரம்புசு ரும்பேற
ஈடுபெ ருக்கிய போர்களின் மேகமி ளைத்தேற
நீடுவ ளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு[2]
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகண் மேலோடும்
வெங்கதிர் தங்கவி ளங்கிய மேன்மழ நன்னாடாம் அங்கது மண்ணில ருங்கிய மாகவ தற்கேயோர் மங்கல மாயது மங்கல மாகிய வாழ்மூதூர்.[3]
என்னும் பாடல்களால் சோழநாட்டின்கண் மழநாடென்றதோர் உண்ணாடுள்ளமை நன்கு தெளியப்பெறும். சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவராய ஆனாயநாயனார் அவதரித்த திருப்பதியாகிய திருமங்கலமும் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற திருப்பாச்சிலாச்சிரமும் இம்மழநாட்டின்கண் உள்ளமை மேலேகாட்டியுள்ள பாடல்களால் இனிதுணரப் படும். அன்றியும் அன்பிலாலந்துறை. திருமாந்துறை, திருப்பழுவூர், திருமழபாடி, திருவிசயமங்கை[4] முதலிய பாடல்பெற்ற திருப்பதிகள் இந்நாட்டின் கண்ணுள்ளன வேயாகும், ஆகவே, இம்மழநாடு கொள்ளிடத்தின் வடகரையைச் சார்ந்ததாய், ஐயன்வாய்க்கால் பெருவளவாய்க்கால் முதலிய கால்வாய்களாற் பாயப்பெற்றுத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் கீழ்மேல் பலகாத தூரம் நீண்டு கிடந்ததொரு நாடாதல் வேண்டும். இஃது ஆசிரியர் சேக்கிழார்காலத்தில் சோழநாட்டின் உள்நாடுகளில்