பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

, 懿酶 மூடு வாயை மடையனைப்போல் பேசாதே --உங்கள் காளிகா தேவியும் வேண்டாம் -பிரசாதமும் வேண் டாம் -ப்ோங்கள் எல்லோரும் வெளியே! - - * స్తో ఆ - (மு. யூ.) மஹாராஜா ! இது பெருங் குற்றமாம். நீங்கள் கோயில் மணிகளை அடிக்கக் கூடாதென்று கட்டளை யிட்டீர்கள் - நமது மதாச்சாரப்படி பூஜை செய்ய லாகாதென்று தடுத்தீர்கள் காளிகாதேவிக்கு கொஞ் சமும் உற்சவ முதலிய மரியாதைகள் செய்யலாகா தென்று ஆக்ஞாபித்தீர்கள்-இப்பொழுதோ, அவர் களின் பிரசாதத்தை மறுக்கிறீர்கள் வேண்டாம் ! காளிதேவிக்கு அஞ்சுங்கள் ! இதுவரையில் நீங்கள் இழைத்த பாபங்களையெல்லாம் பராமுகம் செய்திருக் கிருரர்கள் காளிகாதேவி!-இந்நாட்டையாளும் அரச ராயிற்றே என்று! - இதுவரையில் பொறுத்திருங் தார்கள் போலும்-ஆயினும்-இனிமேல் என்ன உளறுகிருய் !-சேவகர்களே ! பிடித்துத் தள் ளுங்கள் இவர்களேயெல்லாம் : அ ர ண் ம ன க் கு வெளியே! (சேவகர்கள் அப்படியே செய்கிருரர்கள்) மந்திரிகளே ! பிரதானி முதலியோர்களே சேவகர் களே அழகிய மாதர்களே அழைத்து வாருங்கள். நமது நாடெங்கும் பொறுக்கி சுந்தரிகளைக் கொண்டு வாருங்கள்.-நமது மகனுடைய பட்டாபிஷேகதினம் அவர்களெல்லாம் பாடியாடட்டும் ! நமது சபையில் ஆடிப் பாடட்டும்-நமது ராஜ்யம் செழித்தோங்கும்படி! காட் சி முடிகிறது . நான்காம் காட்சி இடம்-ஜெயாவின் அறைக்கு வெளிப்புறம். ஜெயா கின்றுகொண்டிருக்கிருள், பூஜாரி கள், ஜனங்கள் சூழ கிற்கின்றனர். (மு. ஆ.) அம்மா, நாங்கள் கூறியதவ்வளவும் வாஸ்தவம் எங்களே மணியடிக்கக் கூடாதென்று கோபித்தார்! காளிகாதேவியின் பிரசாதத்தையும் வாங்கமாட்டே னென்று மறுத்தார்! எங்களையெல்லாம் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்படி கட்டாேயிட்டார், அவரது சேவ கர்களுக்கு.