பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

இலக்கியப் பேரங்காடி

O

காப்பு அவையடக்கம் கடவுள்வாழ்த் தென்றுசொல்லிப் பூப்படையாச் செய்யுள் புனைந்த புலவரிடைக் கருப்பை வரிகளால் கற்பனைகள் நடத்தியவன்.

சதையைக் கவிதைச் சாற்றால் நனைக்காமல் விதையைத்தன் கற்பனை வீரியத்தால் நனைத்தவன்.

புரட்சியென்று மின்மினிப் பூச்சிகளைத் தந்தவர்க்கு நெருப்புத் துண்டுகளை நேரில் வழங்கியவன்.

மலையிருக்கும் இடம்நோக்கி நடக்காமல் தலைநிமிர்ந்த மலைகளையே தன்பக்கம் வர வழைத்த தமிழ்ச் சுல்தான்.

போதைக்கு மதுவருந்தும் புலவருண்டு; பாவேந்தன் மதுவுக்கே போதை வழங்கும் கவிதைமது.

72