பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கையிலிருந்து வெற்றிச் சின்னமாக நான்மீட்டு வந்த சீதையைத் தீக்குளிப்புக்குப் பின்தானே இது; உலகம் ஏற்றுக்கொண்டது?

கொடியிலிருந்து பறித்தெடுத்த வெற்றிலைத் தளிரைக் கூடக் கழுவித்தான் வாயில் போடுகிறோம். இவள்...

சீதை (தனக்குள்)

என் ஒவ்வொரு மயிர்க்காவிலும் ஊசிகள் பாய்கின்றன. நத்தைய்ைப் போல் எனககுக காதுகளே இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா?

இராவணன் ஒரு வகையில் நல்லவன். அவன் என்னை மறைவான இடத்தில்தான் சிறைவைத்தான் இவர் சொற்கள்

பலர் முன் னிலையில் sTsii ç) gr

83