பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தும்பைப்பூ


சிவகுமாரன் "காணவில்லை" என்று மெல்லக் கூறினான்.

"காணாமல் எங்கேனும் ஓடிப்போய் விட்டதோ! காண வில்லையாம். இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமில்லை?"

சிவகுமாரன் தலைகுனிந்து கொண்டு மௌனமாயிருந்தான்.

"உன் நெம்பர் எப்படி வரும்? நீ பரீட்சையில் நன்றாக எழுதியிருந்தால்தானே!......"

சிவன் இப்போது மெல்ல நிமிர்ந்து, "எல்லாம் நன்றாகத் தான் எழுதியிருந்தேன், அப்பா !......" என மிக மெதுவாகச் சொன்னான்.

"நன்றாக எழுதியிருந்தால் ஏன் பாஸ் மார்க் கிடைத்திருக்காது?" என்று பிள்ளையவர்கள் ஆத்திரத்தோடு கேட்டார்.

"பிஸிக்ஸ் சப்ஜக்டில் கொஞ்சம் மார்க் குறைவாகிவிட்டது. அப்பா!......." என மீண்டும் தலையைக் கவிழ்த்துக் கொண்டே அவன் பதிலளித்தான்.

"அப்போ உனக்குப் பரீட்சை 'ரிஸல்ட்' முன்னமே தெரிந்துவிட்டது என்று சொல்லு. அப்படியானால் அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?..."

"நீங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று......"

"இப்போ கோபித்துக் கொள்ள மாட்டேனா?....."

சிவகுவாரன் பேசாமலிருந்தான்.

"ஆமாம். பரீட்டை 'ரிஸல்ட்' எப்படித் தெரிந்தது. ஒவ்வொரு சப்ஜக்டிலும் மார்க் இவ்வளவு கிடைத்திருக்கிற தென்று இவ்வளவு விவரமாக யார் உனக்குச் சொன்னது?"

சிவகுமாரன், "என்னுடைய வகுப்பு மாணவன் நீலகண்டன் என்பவனுடைய தகப்பனார், சர்வகலாசாலை