பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தும்பைப் பூ


மங்கைக்கு மாசிலாமணி முதலியாரிடத்தில் நல்ல அபிப்பிராயங் கிடையாது. முதன்முதலாகப் பார்த்தபோதே அவளுக்கு அவரைப் பிடிக்கவில்லை. 'எங்கு என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது?’ என்று, அறிவதிலேயே ஆவல் கொண்டவராய் நாலாடக்கமும் பார்வையைச் சுழலவிட்டுப் பார்க்கும் கழுகுப் பார்வையும், எப்போது பார்த்தாலும் ஊர் அக்கப் போரையே அளந்து கொண்டிருக்கும் வம்புப் பேச்சும் அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. பிறரைப்பற்றி எப்போதும் குறைகூறிக் கொண்டிருக்கும் இவர் அத்தானைப் பற்றியும், அவர் குடும்பத்தைப் பற்றியும் பிறரிடம் அக்கப் போர் அளக்காமலிருப்பார் என்பது என்ன நிச்சயம்? அத்தகைய மனிதரிடம் உத்தமரான அத்தான் எப்படி நட்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவள் அடிக்கடி எண்ணி வியப்பதுண்டு. ஆனால் அக்காளும் அவர்பால் மரியாதை காட்டி நடப்பதைப் பார்த்து, தான் அவசரப்பட்டு யாரிடமும் அவரைப்பற்றி அபிப்பிராயம் வெளியிடக் கூடாது என்று அடக்கிக் கொண்டாள். ஆனால் இச்சமயத்தில் அவளுடைய மன உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியவில்லை. 'கட்டையிலே போகிறவன். இச்சமயத்தில் வந்து தொலைந்தானே!' என்றுதான் தன் மனத்துக் குள்ளாகச் சபித்துக் கொண்டாள்.

'பரீட்சையில் தவறிவிட்ட அண்ணனுக்கு அப்பா என்ன விதமான தண்டனை கொடுப்பாரோ? வைவாரோ?' என்ற அச்சத்துடன் விசுவநாதன் தன் அறையிலிருந்து, இவ்விடத்தை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். சதானந்தம்பிள்ளே மாசிலாமணி முதலியாரை வியப்பாக நோக்கி, என்ன முதலியார்வாள், அப்படிச் சொல்லு கிறீர்கள்? சிவன் விஷயத்தில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை எ ப் படி யு ண் டா யி ற் று? நீங்கள் என்ன கண்டீர்கள்?......” என்று கேட்டார்.

மாசிலாமணி முதலியார் பொக்கை விழுந்த வாயை அகலத் திறந்து கலகலவென நகைத்தவராய், "நான் எங்கு