பக்கம்:துறைமுகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 104 அருமைச் சதைமலர் மொட்டாம்-அதன் ஆதிக் கதைகளை யெல்லாம் உரிமைத் தமிழிலோர் நூலாய்ப் -பிணி ஒட்டும் மருத்துவ வேலாய்ப் பெருமைத் திருமகன் தந்தார் புகழ் பெற்றிடும் வெற்றிநூல் தந்தார். அருமை மருத்துவ நூலாம்- இதை ஆணிவேர் மாமரம் என்பேன். காடு செழித்திட வேண்டும்- எனில் கார்முகில் பெய்திட வேண்டும். நாடு நலம்பெற வேண்டும் எனில் நல்ல தலைவர்கள் வேண்டும். வீடு விளங்கிட வேண்டும் எனில் வேல்விழி மங்கையர் வேண்டும். ஏடு புகழ்பெற வேண்டும் எனில் இப்படி நூல்தர வேண்டும் 2GΧδS& டாக்டர் எச். செல்வராஜ் அவர்கள் எழுதிய 'இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1968 ல் வழங்கிய அணிந்துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/100&oldid=923975" இலிருந்து மீள்விக்கப்பட்டது