பக்கம்:துறைமுகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 கவிஞர் சுரதா கண்கவர் காட்சிக் கவிதையை முதலிலும், முழுக்கதைப் பாடலை நூலின் முடிவிலும் வைத்துள்ள போக்கு வரவேற்கத் தக்கது. உள்ளபடி சொல்கிறேன். ஒவ்வொரு பாடலும் கொள்ளுபடி ஆகுமே அன்றிக் கொஞ்சமும் தள்ளுபடி ஆகாது சாரம் இருப்பதால்: இலக்கியம் கற்றவர் இயற்றிய இந்நூல் முழுநிலவு போன்றது, மொட்டுச் சிறுவரை நல்லவ ராகவும் வல்லவ ராகவும் ஆக்கத் தக்கநூல்; அறியாமை இருளைப் போக்கக் கூடிய புத்தக வெளிச்சம். வளரட்டும் இந்த வெளிச்சம் வளரட்டும் இவர்புகழ் வரலாறு போலவே! 2ుOCSSR பூவண்ணன் எம்.ஏ., அவர்கள் எழுதிய 'பாட்டுத் தோட்டம்' என்னும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970 ல் வழங்கிய அணிந்துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/105&oldid=923980" இலிருந்து மீள்விக்கப்பட்டது