பக்கம்:துறைமுகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 கவிஞர் சுரதா இப்படியோர் புத்தகத்தை நமது நாட்டில் எல்லோரும் தொகுத்திடலாம். தொகுத்த போதும், செப்பனிட்ட துணுக்குகளுக் கேற்ற வாறு சிறப்பான தலைப்புகளைத் தருவ தற்கும். அப்படியே தரினும்நகைச் சுவையைப் பற்றி அரியதொரு திறனாய்வு செய்வ தற்கும். கொப்பளிக்கும் தனித்திறமை வேண்டு மன்றோ? குருத்தோலை எழுத்தரிதற் கெங்கே போவர்? சிரித்துமகி ழுங்களெனும் இந்த நூலைத் திறந்தாலே சிரிப்புவரும். இதைவா சித்தால், வருத்தமெலாம் பறந்தோடும். இலக்கி யத்தின் வளர்ச்சிக்கும் கைகொடுக்கும். பக்கம் தோறும், அருத்தமுள்ள துணுக்குகளும், இளைஞர்க் கெல்லாம் ஆசைதரும் துணுக்குகளும் நிறைந்த இந்நூல், மருத்துவர்க்கும் மருந்துதரும். நமது நாட்டு மக்களிதை அவசியமாய்ப் படிக்க வேண்டும். 2CDCl3. பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன் எம்.ஏ.எம்.லிட், பிஎச்.டி அவர்கள் எழுதிய 'சிரித்து மகிழுங்கள்' என்னும் நூலுக்கு 1975 ல் வழங்கிய அணிந்துரை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/111&oldid=923987" இலிருந்து மீள்விக்கப்பட்டது