பக்கம்:துறைமுகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 கவிஞர் சுரதா ஒற்றையடிப் பாதை ஆணிப்பொன் போற்சிறந்து விளங்கி நின்ற அமிர்தகவி ராயர்யார்? என்று கேட்டால், நாணிக்கண் புதைத்தலெனும் ஒருது றைக்கே நானூறு பாட்டெழுதிப் பிறரை வென்ற மாணிக்கப் புலவரவர் செய்த நன்றி மறவாத புலவரவர். அவர்பேர் தன்னைத் துணுக்குத் துரணெழுதி வைக்கச் சொல்லும் தோழர்களுள் ஒருதோழர் சோதி வாணன். வான்மதிக்கும் செங்கதிரைப் போன்று, தோகை மயில்மதிக்கும் மேகத்தைப் போன்று. நாட்டில் நான்மதிக்கும் கவிஞர்களுள் ஒருவரான நற்கவிஞர் சொற்கவிஞர் சோதி வாணன், ஊன்மதிக்கும் உயிர்போன்று சிறந்த தான ஒற்றையடிப் பாதையெனும் கவிதை நூலைத் தேன்மதிக்கும் செந்தமிழில் தீட்டி யுள்ளார். தீட்டியிதில் புதுமைபல காட்டி யுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/113&oldid=923989" இலிருந்து மீள்விக்கப்பட்டது