பக்கம்:துறைமுகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா திங்களே வாழ்க! "திங்களே வாழ்க!" என்றான் தேன்.மழைக் கவிஞன். "தண்ணீர்ச் சங்கிலி அலைக ளாடும் சமுத்திரம் தன்னில் தோன்றும் திங்களை வாழ்த்து வானேன் தெரிவிப்பீர்?" என்றாள். "விண்ணில் தொங்கிடும் நிலவு நம்மைச் சுடாததால் புகழ்ந்தேன்” என்றான். "பண்பட்ட கதிரே! தங்கப் பருதியே வாழ்க!" என்றான். கண்பட்டுக் காதல் கொண்ட - காரிகை விளக்கம் கேட்டாள். "மண்முட்டை உலகம் வாழ, மயில்நிற இருட்டு வீழ, விண்பட்ட கதிரோன் வேண்டும் p! மெல்லிய மலரே!” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/12&oldid=923996" இலிருந்து மீள்விக்கப்பட்டது