பக்கம்:துறைமுகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 126 அமுதும் தேனும் எதற்கு அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு -வான் அமுதும் அருவிதரும் குளிர்நீர் அன்பே இனிமேல் அதுவும் சுடுநீர் ஆகும் நமக்கு- வான் (அமுதும்) நிலவின் நிழலோ உன்வதனம்- புது நிலைக்கண் ணாடியோ மின்னும் கன்னம் மலையில் பிறவா மாமணியே- நான் கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்) விழியாலே காதல் கதைபேசு மலர்க் கையாலே சந்தனம் பூசு தமிழ் மொழிபோலே சுவையூட்டும்.செந்தேனே உடல்நான் உயிர்நீ தானே! -வான் அமுதும் படம் : தைபிறந்தால் வழிபிறக்கும் (1958) தயாரிப்பு : அருணாசலம் பிக்சர்ஸ் பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/122&oldid=923999" இலிருந்து மீள்விக்கப்பட்டது