பக்கம்:துறைமுகம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கவிஞர் சுரதா வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன் வச்சிருக்கேன்- நான் வச்சிருக்கேன்- ரொம்ப ரகசியமாக வச்சிருக்கேன் மருவு மருக்கொழுந்து வச்சிருக்கேன் மனசுக்குள்ளே உன்னை வச்சிருக்கேன் (வச்சி) மாமரச் சோலையிலே மத்தாப்பு வெளிச்சத்திலே மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு மன்மதனே ஆசை கொண்டு (வச்சி) கொம்பின் அருகில் கொடியிருக்கு கொடியின் மேலே மலரிருக்கு மலருக்குள்ளே நல்ல மதுவிருக்கு மனமிருந்தால் தான் வழியிருக்கு (வச்சி) நட்டுவச்ச கல்லைப்போலே நிக்காதே- இந்தப் பட்டுப்பூச்சி நெஞ்சை வேக வைக்காதே கொத்தும் கிளிதான் நீ எனக்குக் கோவைப் பழந்தான் நான் உனக்கு வச்சி படம் தலைகொடுத்தான் தம்பி (1959) பாடியவர் ஜமுனா ராணி தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் . இசையமைப்பாளர் : விசுவநாதன் & ராமமுர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/123&oldid=924000" இலிருந்து மீள்விக்கப்பட்டது