பக்கம்:துறைமுகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 134 நோயிருந்து வாட்டுதல்போல், முள்ளின் உச்சி நுனியிருந்து குத்துதல்போல் குத்தும் ஆட்சி சாயும்வரை யாம்சாய மாட்டோம், வெள்ளைச் சழக்கர்களின் துப்பாக்கித் தும்மல் இங்கே ஒயும்வரை யாமினிமேல் ஒய மாட்டோம் ஒழித்திடுவோம் இல்லையெனில் ஒழிவோம் என்றே தாயகத்தில் குரல்கொடுத்தோம். காந்தி யாரின் தலைமையில்நாம் விடுதலையை முயன்று பெற்றோம். பெற்றுவிட்டோம் விடுதலையை எனினும், மேலும் பெறத்தக்க உரிமைகளைப் பெறுதல் வேண்டும். சற்றுவிட்டுக் கொடுத்தாலும் ஆங்காங் குள்ள क्रीडाप्रौ அதிகாரி யாகி, நெல்லைக் குற்றிவிட்ட உமியைப்போல் ஒதுக்கித் தள்ளிக் குடைபிடிக்கும் ஆட்சியினை நிலைக்கச் செய்வர். ஒற்றுமைக்கும், எல்லார்க்கும் எல்லாம் வந்தே ஒட்டுதற்கும் பொதுவுடைமைப் புரட்சி வேண்டும். இல்லையென்றும், இல்லையென்ற கார ணத்தால் ஏழையென்றும், எளியரென்றும், வறுமை என்னும் தொல்லைவந்து வாட்டுவதால் புழுப்போல் நாங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் யாரும் சொல்லுதற்கு வழியின்றிச் செய்ய வேண்டின் சுடச்சுடநாம் புதுமாற்றம் காண வேண்டும். நல்லவர்கள் இக்கருத்தை ஏற்பர் நாட்டின் நலங்கருதார் எதிர்த்தாலும் முடிவில் தோற்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/129&oldid=924006" இலிருந்து மீள்விக்கப்பட்டது