பக்கம்:துறைமுகம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 - கவிஞர் சுரதா குடும்ப நலம் குலம்வேண்டும்; ஒரேகுலந்தான் நமக்கு வேண்டும். குறிக்கோளும் கொள்கைகளும் வேண்டும்; தேக பலம்வேண்டும் எப்போதும் நாட்டைக் காக்கப் படைவேண்டும் பாடுபடும் உழவர்க் கெல்லாம் நிலம்வேண்டும்; கனல்கக்கும் கோடை வந்தால் நிழல்வேண்டும்; அதுபோல மாந்தர் வாழ்வில் நலம்வேண்டும்; குடும்பநலம் GaఉGL மென்றால் நமதுநட வடிக்கைசில மாற வேண்டும். குடும்பமென்ப தென்னவென்றால், உறவால் தோன்றும் கொப்புளத்தின் வட்டந்தான். நமக்கு வேண்டும் குடும்பநலம் என்னவென்றால், குழந்தை என்னும் குழிக்கிழங்கைக் குறைப்பதுதான். எல்லோ ருக்கும் குடும்பநலம் செல்வத்தால் வரலாம்; பத்துக் குழந்தைகளைப் பெற்றுவிட்டால் வருமா? நல்ல குடும்பநலம், ஓயாமல் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கும் இல்லத்தில் இருப்ப தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/136&oldid=924014" இலிருந்து மீள்விக்கப்பட்டது