பக்கம்:துறைமுகம்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

கவிஞர் சுரதா


என் கணவர் நிலவில் நடக்கிறார்

செங்கல்லின் மீதினிலே மெதுவாய் ஏறும்
           ::சிலந்தியைப்போல் வானவெளி வீரர் ஆர்ம்ஸ்ட்ராங்
                 திங்களன்று நிலவின்மேல் காலை ஊன்றிச்
                 ::செயற்கரிய செயல்செய்தார் என்று கேட்டுப்
               பொங்கலன்று பூரிக்கும் தமிழர் போலப்
                  
பூரித்தேன். வாயார வாழ்த்த லானேன்.
                 திங்களன்று வெற்றிகண்ட வீரர் தம்மைச்
                ::செவ்வாயால் என்மகளும் வாழ்த்த லானென்
                 
                  மைக்கேலும் காலின்கம் நீல் ஆர்ம்ஸ்ட் ராங்கும்
                ;
வான்மதியில் மெதுவாகக் காலை ஊன்றிக்
               கைக்கோலால் ஆராய்ந்து, நிலவுப் பாறைக்
                         ::கட்டிகளைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.
                                    
பொய்க்காதல் தோற்பதுபோல், அமெரிக் காவின்
                  ::புதுமுயற்சி தோற்றிருந்தால், இந்த நாட்டின்
             வைக்கோல்போர் வைதீகம், ராகு கேது
                 ::வரலாற்றுப் பஞ்சாங்கம் படித்தி ருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/14&oldid=1448029" இலிருந்து மீள்விக்கப்பட்டது