பக்கம்:துறைமுகம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 கவிஞர் சுரதா உத்தரவின்றி உள்ளே அந்நாளில் காவிரி ஆற்று வெள்ளம் உத்தர வின்றி உள்ளே வந்ததால் ஓங்குபுகழ் நகராம் உரையூர் அழிந்தது. பொல்லாக் கருங்கடல் பொங்கிப் பெருகி, உத்தர வின்றி உள்ளே வந்ததால் முத்தமிழ்ச் சங்கம் மூழ்கிற்று. மேலும், ஏழ்தெங்க நாடும் எங்கோ மறைந்தது. நல்லவர், மிகமிக நம்பிக்கைக் குரியவர் உத்தர வின்றி உள்ளே வரலாம். அந்தித் தென்றலும் அப்படி வரலாம். மற்றவர் வருவதும் வரநாம் விடுவதும் குற்றத்திற்கு விருந்து கொடுத்தல்போ லாகுமே! £oxo

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/146&oldid=924025" இலிருந்து மீள்விக்கப்பட்டது