இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
153 கவிஞர் சுரதா ஆதியில் அழகைக் கண்டார் அழகிலே மயக்கம் கொண்டார். காதலில் உறவு கொண்டு கற்பினில் குடும்பம் கண்டார், பாதியில், பழுத்த பொய்யர் பற்பல சடங்கு சேர்த்தார்; வேதமும் சடங்கும், காதல் வெற்றிக்குத் தடைக ளன்றோ? ஆதியில் வாழ்ந்தோர்க் கெல்லாம் அச்சமே இறைவ னானான். ஒதிய மேலோர்க் கெல்லாம் உண்மையே இறைவு னானான். பாதியில், நாட்டை யாண்ட பார்த்திபன் இறைவ னானான். மேதினி மீதில் இன்றோ விஞ்ஞானி இறைவ னானான். PODGR