பக்கம்:துறைமுகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

{{Larger|

வினாத்தாள்

<Poem>வெள்ளைத் தாளெல்லாம் வெறும்தாள் நானோ ஆத்தாள் இன்றியே பிறந்த வினாத்தாள் காலாண்டுக் கொருமுறை, அரையாண்டுக் கொருமுறை, ஆண்டின் இறுதியாம் அப்போ தொருமுறை, மாணவர் தம்மைநான் சந்திக்க வருவேன். வாவென் றழைப்பதால் பள்ளிக்கு வருகிறேன். கேளென்று சொல்வதால் கேள்வி கேட்கிறேன். பாடத்தை ஒழுங்காய்ப் படிக்காத மாணவன் என்னைக் கண்டதும் எரிச்சலடைகிறான். என்னைக் கிழித்தே எறியவும் நினைக்கிறான். என்னை வெறுப்பதால் எனக்கென்ன நட்டம்! கிழித்தென்னை எறிவதால் கிடைக்குமோ பட்டம்!<\poem>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/16&oldid=1447908" இலிருந்து மீள்விக்கப்பட்டது