இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞர் சுரதா பட்டாடை உடுத்துவாராம் இடிப்பவன், மக்கள் நெஞ்சில் இடம்பெறான். திருடிப் பாடல் தொடுப்பவன் என்றோ ஒர்நாள் தோற்றுப்போய் விடுவான். நாட்டில் நடிப்பவன் பெருமை கொஞ்ச நாளைக்கே நிலைத்தி ருக்கும். கொடுப்பவன் பெயரை இந்தக் குவலயம் மறப்ப தில்லை. சடையப்பன் கொடுத்த தாலே சரித்திரம் பெற்றான். ೧೧ುವೆ:೧೧7ಹ குடையப்பன் கரிகாற் சோழன் கொடுத்ததால் கீர்த்தி பெற்றான். உடையப்பன் பாரி வள்ளல் ஊரையே கபிலர்க் கீந்தான் இடையப்பன் ரங்கப் பிள்ளை ஈந்ததால் சாவை வென்றார்.