பக்கம்:துறைமுகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா பல்லவி பாடிவந்தான் சல்லடை வானத்திலே முழுச் சந்திரன் தோன்றியபின் பல்லவி பாடிவந்தான் அந்தப் பாவையை நாடிவந்தான். மல்லிகை பூத்ததென்றாள் மண மாலைக் குதவுமென்றான். நல்லநாள் பாருமென்றாள் அதில் நம்பிக்கை இல்லையென்றான். வேலிடம் சேலிடத்தில் அவள் விழிகளோ விண்ணிடத்தில். காலிடம் கையிடத்தில் அவன் கண்களோ பெண்ணிடத்தில், மேலிடம் வேண்டுமென்றான் மணல் மேட்டினைக் காட்டிநின்றாள். நாலிடம் உள்ளதென்றாள் அதில் நடுவிடம் தேவையென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/44&oldid=924067" இலிருந்து மீள்விக்கப்பட்டது