பக்கம்:துறைமுகம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 50 நெய்வேலி வெள்ளைச்சாமி நெய்வேலி வெள்ளைச் சாமி நிழல்தரும் சோலை தன்னில், மைவேலி இட்ட மங்கை வருகைக்குக் காத்திருந்தான். பொய்வேலி கட்டிக் காட்டும் புராணத்தைப் போன்று நீண்ட தைவேலித் தெருவைத் தாண்டிச் சந்திக்க வந்தாள் வஞ்சி. வந்தவள் அழகைக் காண வந்தது நிலவு. வஞ்சி வந்ததைத் தெரிந்து கொண்டு வந்தது தென்றல் காற்று. கந்தரி "அத்தான்" என்றாள். தொடவந்தோன் "அன்பே" என்றான். பந்தயம் கட்டிக் கொண்டு பார்வைப்போர் புரிய லானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/49&oldid=924072" இலிருந்து மீள்விக்கப்பட்டது