பக்கம்:துறைமுகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 52 பதிக்கவா என்றான். எச்சில் படுமேஎன் இதழில் என்றாள் எதற்காக இதழ்கள். முத்தம் இடத்தானே! சத்து மிக்க சதைக்கனி தின்னத் தானே! சந்தனம் பூசத் தானே! விதைக்கவா? என்றான். சற்றே விலகினாள். விட்டா னில்லை. நாடென்று சொல்லு வார்கள்: நாடினால் நகரென் பார்கள்: போடென்று சொல்லு வார்கள் போட்டாலோ குடிய வெனன்பர். கூடென்று சொன்ன பின்னர்க் குறைகூறி ஒதுங்க லாமோ? பாடுக குயிலே என்றன் பக்கம்வா! என்ற ழைத்தான். வரவுதான் இனிமேல் என்றாள். வாழ்க்கையே செலவு தானே அருகில்வா, என்றான். வந்தாள். அதற்குப்பின் நடந்த தென்ன? இரவினில் உறவு கண்டார். இதழ்க்கனி பறித்துக் கொண்டார். ஒருமுறை புறாவின் சத்தம். ஒருமுறை வேறோர் சத்தம். BCDCષર

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/51&oldid=924075" இலிருந்து மீள்விக்கப்பட்டது