பக்கம்:துறைமுகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா மனப்பவர் எங்குள்ளாரோ? பூமகள் என்பேர். நல்ல புத்தகம் படிக்கும் என்னை நாமகள் என்பாள் தோழி நானதை ஏற்க மாட்டேன். பாமர மக்கள் ஏதும் படிப்பதே இல்லை என்பாள். தாமரைப் பூவின் தேனைத் தவளைபோய் உண்ணா தென்பேன். அம்பிகை என்னும் தோழி, அழகான தேமல் தன்னை வெம்பாத செம்பொன் என்று வேடிக்கை யாகச் சொல்வாள். தும்பிக்கை பிள்ளை யாரே துணையென்பாள். போடி போடி, நம்பிக்கை போலும் வேறு நற்றுணை இல்லை TవrGLఉ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/52&oldid=924076" இலிருந்து மீள்விக்கப்பட்டது