பக்கம்:துறைமுகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குரல் நான் மிகவும் விரும்பிப் படிக்கும் நூல்கள் இரண்டு. அதில் ஒன்று கலிங்கத்துப்பரணி, மற்றொன்று கல்லாடம், ஆகவேதான் என் ஒரே மகனுக்கும் "கல்லாடன்" என்று பெயரிட்டேன். கல்லாடம் என்னும் நூலிலுள்ள நூறு பாடல்களும் மிக நீண்ட பாடல்களாகும். எதற்கும் அவசரப்படும் இன்றைய உலகத்தில், இனி அப்படிப்பட்ட நெட்டைக் கவிதைகள் எழுதுவதென்பது நேரத்தை வீணாக்குவதாகும். எனவே மிகச் சிறு சிறு கவிதைகளை இத்தொகுப்பில் இடம் பெறச் செய்துள்ளேன். பழைய தலைமுறையைச் சேர்ந்த நான், புதிய தலைமுறையினருக்குத் தேவையான கருத்துள்ள கவிதைகளை வழங்கியுள்ளேன். கலைஞர் கருணாநிதி நகர், அன்புடன் சென்னை - 600 078 சுரதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/6&oldid=924084" இலிருந்து மீள்விக்கப்பட்டது