பக்கம்:துறைமுகம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா சிந்துக்குத் தந்தை பாட்டுப் படையலினால் புதுப் பாதையைக் காட்டியவன்; சீட்டுக் கவிதையினால் -சில செய்திகள் சொல்லியவன்; பூட்டுக் கவிதைகளை- வியப் பூட்டிடப் பாடியவன்; வேட்டை அரசனைப்போல்- அவன் வென்று விளங்கியவன். தந்தைக்குக் கால்களவன் பெற்ற தாய்க்கிரு கண்களவன். பந்துக்குக் கைகளவன்- பெண்கள் பார்வைக்குக் காமனவன் அந்திக்குத் தென்றலவன் வைகை ஆற்றுக்குப் பாலமவன் சிந்துக்குத் தந்தையவன்- செய்யுள் சிங்கத்தின் சிங்கமவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/74&oldid=924100" இலிருந்து மீள்விக்கப்பட்டது