பக்கம்:துறைமுகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கவிஞர் சுரதா கவிதைத் தலைவர் நேரு சுவைகண்டார் இலக்கியத்தில் துணைகண்டார் திருமணத்தில் தொடர்ந்து சுற்றிப் புவிகண்டார் விந்தைபல இவர்கண்டார். வெளிநாட்டுப் புரட்சி கண்டார்; கவிகொண்ட உரைநடையில் கடிதங்கள் எழுதிநமைக் கவர்ந்து கொண்டார் எவர்கண்டும் காணாத மிகப்பெரிய கூட்டத்தை இவரே கண்டார். பச்சிலைபோல் குளிர்ந்தவுளம் இவர்பெற்றார் பேரறிஞர் பழக்கம் பெற்றார். விச்சையெனும் கல்வியினை மேன்மேலும் ஆராய்ந்து விளக்கம் பெற்றார்; உச்சியெனும் உயர்ந்தநிலை இவர்பெற்றார்; உலகத்தில் உயிர்வு பெற்றார். எச்சமெனும் புகழ்பெற்றார். இந்திரா காந்தியையும் இனிது பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/80&oldid=924107" இலிருந்து மீள்விக்கப்பட்டது