பக்கம்:துறைமுகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கவிஞர் சுரதா (கும்மி) கண்ணில் கருணையும் கைதனில் நூலையும் கல்வியை நெஞ்சிலும் வைத்தவராம்: மண்ணில் அடியையும் விண்ணில் புகழையும் மார்பில் மலரையும் வைத்தவராம். பொய்யழுக் கற்றநல் அந்தணராம்- புவி போற்றும் புதுமை புரிந்தவராம்: செய்யும் செயலில் சிறந்தவராம் -பெருந் தேசத்தை வாழ்விக்க வந்தவராம். குழந்தையை நேசிக்கும் பண்டிதராம்- மூடக் கொள்கையைக் கண்டிக்கும் பண்டிதராம்: விழுந்த மழைத்துளி போன்றவராம் -புது விஞ்ஞான ஏக்கம் நிறைந்தவராம். சாதி மதங்கள் கடந்தவராம்- அவர் சத்திய கீர்த்தியைப் போன்றவராம், நீதியும் நேர்மையும் கொண்டவராம் -பகை நெஞ்சிலும் நட்பாய் நுழைந்தவராம். துங்கிய வேங்கை விழித்ததுபோல் புகைத் தூக்கம் கலைந்த நெருப்பதுபோல் ஆங்கிலர் ஆட்சியை நின்றெதிர்த்தார் -உயிர் அல்லவோ பாரதம் என்றுரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/82&oldid=924109" இலிருந்து மீள்விக்கப்பட்டது