பக்கம்:துறைமுகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 86 ஆலையும் நற்கல்விச் சாலையு மேநமக் காலய மாகுமென் றேயுரைத்தார். மேலை நிலத்தவர் விந்தையைக் கண்டுநாம் வேடிக்கை பார்ப்பதோ என்றுரைத்தார். கூம்பலும் சோம்பலும் கூடாதென்றார்- வெறும் கூச்சலில் வண்டியும் ஓடாதென்றார். சாம்பல் எரியுமோ மீண்டுமென்றார் -புதுச் சாதனை அல்லவோ வேண்டுமென்றார். இந்தியா சிறந்த தேசம் இல்லையா? என்று கேட்பர் இந்திய நாட்டில் ஏழ்மை இல்லையா? என்று கேட்பேன். இந்தியா வாழ வேண்டும்; இரணியன் இறந்த நேரம் அந்தியா? பகலா? என்னும் ஆராய்ச்சி இன்றா தேவை? இல்லையே என்று மக்கள் ஏங்குதல் எங்கள் வாழ்வு தொல்லையே துயரே என்று சொல்லுதல் சிலர்நம் நாட்டில் கொல்லைப்பூ வாசம் வீசக் கூடத்தில் ஊஞ்ச லாடல் நல்லதா? இந்தப் போக்கு நாட்டுக்குத் தேவை தானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/83&oldid=924110" இலிருந்து மீள்விக்கப்பட்டது