பக்கம்:துறைமுகம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கவிஞர் சுரதா இனிக்கும் நினைவுகள் எத்தனையோ ஆசையுண்டு நமது நெஞ்சில் எத்தனையோ ஏக்கமுண்டு நமது வாழ்வில் எத்தனையோ எண்ணுகிறோம் எண்ணும் எண்ணம் எல்லாமே இனிப்பதில்லை; கசப்ப தில்லை, ஒத்தமனம் கொண்டுவிட்டால் காதல் ஆங்கே ஊற்றெடுக்கும் நினைவெல்லாம் இனிக்கும்; கவ்விச் சத்துடையோர் தொடுக்கின்ற பாடல், நன்கு சாதிக்கும்! தலைமைக்கும் தலைமை தாங்கும். பக்குவத்தைப் பழுத்தபழம் காட்டும். நல்ல பாடல்களை அப்பாடல் கருத்து காட்டும். தக்கவர்தம் ఉఱిణ55Ga தமிழைக் காக்கும். தமிழ்நுட்பம் அறியாதார் சருகுச் செய்யுள் மக்களிடம் போய்ப்பழகும் இந்த நாளில், மணிக்கவிஞர் எழில்முதல்வன் வடித்த பாடல், வீணைக்கும் நரம்பாகும் கரும்பு மாகும். விணைக்கும் நரம்பாகும்; கரும்பு மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/89&oldid=924116" இலிருந்து மீள்விக்கப்பட்டது