பக்கம்:துறைமுகம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 கவிஞர் சுரதா குழல்முதல்வன் கீதையினால் கீர்த்தி பெற்றான் குருபாதன் சதகத்தால் பெருமை பெற்றான் கழல்முதல்வன் அதிவீர ராமன் என்பான் கனிந்தசுவைக் காவியத்தால் ஆவி பெற்றான். எழில்முதல்வன் இந்நூலின் மூலம், தக்க இடம்பெற்றார். மிகச்சிறந்த செய்யுள் செய்யும் தொழில்முதல்வன் எனும்தகுதி பெற்றார். என்றும் தூங்காத பெரும்புகழை விரைவில் பெற்றார். பூமாலை அசைந்தாடும் பக்கம் ஈக்கள் போவதில்லை, பலரிங்கே ஈக்கள் போன்று பாமாலை என்றாலே தொடுவ தில்லை. பதிப்பகமும் மதிப்பளித்து வளர்ப்ப தில்லை. காமாசோ மாவென்றே எழுது வோரின் கதைபடிக்கும் பேர்வழிகள், இந்நூல் என்ன தேமாவா? புளிமாவா? என்றால், நூலைத் திறந்துபடித் தால்பிறகு தெரியும் சேதி: 2ు)QR பேராசிரியர் எழில்முதல்வன் எம். ஏ. அவர்கள் எழுதிய 'இனிக்கும் நினைவுகள் என்னும் கவிதை நூலுக்கு 1966 ல் வழங்கிய அணிந்துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/91&oldid=924119" இலிருந்து மீள்விக்கப்பட்டது