பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த சன் சதுத்தேச வியங்கன் சரோஜா அக்கா, நீங்கள் கூடவா என்ன இப்படிச் சோதனை செய்யவேணும்? என் மனசு உங்களுக்குத் தெரியாதா? நான் அவரை மறக்க முடியுமா? I அவள் குரலில் துக்கம் பிரிட்டு வெளிப்படு 一岛நீர்து: - மருதாபி: பிறகு எதற்காக உடனே போகவேண்டும் என்கிருய்? --- - சரோஜா. வேறு வழி? பந்துக்களுடைய வெறுப்பை நினைத்து அன்றைக்கு நான் ஓடிப்போனேன். இப் பொழுது அவருக்குக்கல்யாணம் நடக்கப் போகிறது. அப்படி நடக்கட்டும்-என்னுதான் போனேன். நான் மறுபடியும் இங்கே தலை காட்டினுல் அவருக்குத் தான் வீண் துன்பம் ஏற்படும். இல்லையா அக்கா? மருதம்: எப்படி சரோஜா நான் உன்னைப் போ என்று சொல்லட்டும்? சரோஜா: அக்கா, நேரமாகிறது. அடுத்த ரெயிலுக்கு நான் எப்படியும்போயாக வேண்டும். நீங்கள் கொஞ் சம் யோசனை செய்து பாருங்கள். நான் இங்கே இருந்து பிரயோசனம்? - - - கருதாபி: (இரக்கத்தோடு) ஆமாம், நீ சொல்வது மெய் தான். இனி இங்கிருந்து என்ன செய்யப் போகி ருய்? நீ நேற்ருவது வந்திருக்கக் கூடாதா? |சரோஜாவின் தோள் மேல் கையைப் போடு கிருள். கண்களில் ச்ே பிதுங்குகிறது.} சரோஜ: (வருத்தத்தோடு அப்படியெல்லாம் நினைத்து ஏங்கி இனி ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் போய்வரட்...நான் போகட்டுமா, அக்கா? என்ன மறந்து.(குரல் கம்முகிறது.) - -