பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

és து ரன் எழுத்தோன் பங்கன் தெரிய வரும். பழங்கால மனிதனைவிட நாம் எந்த ைெகயில் உயர்வு? அவன் கண்டறியாத மின்சார விந்தையும், ஆகாய விமானமும், அணுக்குண்டுகளும் நமக்கு தமது அறிவின் வல்லமையினலே கிடைத்திருக் கின்றன. ஆளுல் அவையா முன்னேற்றத்திற்கு அடையாளம்? இன்று மனிதனுக்குப் பலவிதமான வசதிகள் உண்டாகி யிருப்பது மெய்தான். ஆளுல் அவையெல்லாம் இருந்து என்ன பயன்? இயற்கை வின் சக்திகள் பலவற்றை மனிதன் தன் ஆதிக்கத்திற். குள் கொண்டு வந்திருப்பதும் மெய்தான். ஆளுல் அவற்றைக்கொண்டு அவன்தன்னைத் தானேஅழித்துக் கொள்வான் போலல்லவா தோன்றுகிறது? பாரதியார் கூறுகிருர், “ யந்திர பீரங்கிகளும் சப்மரீன்களும் நாகரிகத்திற்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங் களும், ஆகாச வெடிகுண்டுகளும் அபிவிருத்திக்கு லட்சனமல்ல. அவை மனிதனுக்குப் பலமல்ல, துணை யல்ல. அவை மனிதனுக்குப் பகை. மனிதனையும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடை யன ’ என்று. - , * விஞ்ஞானம் இன்று அற்புதமாக வளர்ந்திருக்கின் றது. உலகத்தை இன்ப வீடாகச் செய்யக்கூடிய சக்திகன், வசதிகள் மனிதன் கையில் அகப்பட்டிருக் கின்றன. ஆனல் அவை இருந்து என்ன பயன்? மனிதனுடைய உள்ளம் பண்பட்டு வளரவில்லையே! அது இன்னமும் விலங்குநிலையிலேயே இருக்கின்றதே! இன்று மனிதன் விஞ்ஞானத்திலே ஆதிக்கம் பெற்றிருக்கிருன்டஅவன் அந்த விஞ்ஞானத்தால், அழிந்துபோகும் காலம்-வராமல்-இருக்கவேண்டு மானுல் அவனுடைய குரங்குத் தன்மை மாறவேண்டும்.